Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஷார்ஜா: ஷார்ஜாவில் ஏகதா அமைப்பு, இந்திய துணை தூதரகத்தின்
ஒத்துழைப்புடன் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியை கடந்த 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்கினர். இவ்விழாவில் இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ் குமார் சிவன் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். 160 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 12 வது ஆண்டாக தொடர்ந்து நடந்து வரும் பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.